எம்மில் வாழும் முதுபெரும் முதுசம், அல்ஹிலால் மத்தியகல்லூரியின் கல்விப் பொக்கிஷம் ஏ.சி.எம்.மக்கீன் அதிபர் அவர்களின் கல்விப்பணிகள் மற்றும் சமூகப்பணிகளை கௌரவித்து அவருக்கான சிறப்பு மலர் “வித்தியாரம்” நூல் வெளியீடும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Dr.KM.Nihal அவர்களின் நிதிப்பங்களிப்பில் அப்துல் காசிம் பௌண்டேஷனின் ஒழுங்கமைப்பில், Mutur JMI வெளியீட்டகத்தின் பதிப்பில் வெளிவரவுள்ளது வித்தியாரம் சிறப்பு மலர்.
நூலின் தொகுப்பாசிரியராக ஓய்வுநிலை SLAS அதிகாரி கலாபூஷணம் MCM.Sheriff அவர்களோடு மலர்க்குழு அங்கத்தவர்களாக கலாபூஷணம் MS.Amanulla, கலாபூஷணம் AS.Ubaidulla மற்றும் ஆசிரியர்களான Abbas Nijam, KM.Jayis ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.
ஏ.சி.எம்.மக்கீன் அதிபர் அவர்கள் உருவாக்கிய பல ஆளுமைகளின் ஆக்கங்கள் மற்றும் பதிவுகளை சுமந்துவரும் வித்தியாரம் நூல் ஒரு வரலாற்று ஆவணமாக எதிர்காலத்தில் அமையும் என்பதல் ஐயமில்லை.
